/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அணை அருகே வாழைத்தார் வெட்ட போன தொழிலாளர்களுக்கு சோகம்! Bhavani Sagar Dam | Sathyamangalam | Coracle
அணை அருகே வாழைத்தார் வெட்ட போன தொழிலாளர்களுக்கு சோகம்! Bhavani Sagar Dam | Sathyamangalam | Coracle
பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதியில் ஒத்தை பனை மரக்காடு என்ற இடம் உள்ளது. அணையை ஒட்டிய அப்பகுதியில் சிலர் வாழை பயிரிட்டுள்ளனர். இன்று கோடேபாளையம் கிராமத்தை சேர்ந்த ராசு என்பவரின் தோட்டத்தில் வாழைதார் வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அதில் 3 தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை வெட்டி மின்மோட்டார் பொருத்தப்பட்ட பரிசலில் ஏற்றினர். 3 பேரும் பரிசலில் ஏறி அணையை கடக்க முயற்சி செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பரிசல் கவிழ்ந்தது. இதில் சக்தி என்பவர் நீந்தி கரை சேர்ந்தனர். சத்தியமங்கலத்தை சேர்ந்த சுரேஷ், கோடேபாளையம் மணிகண்டன் நீரில் மூழ்கினர்.
ஆக 02, 2025