/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ₹26 கோடி திட்டம் என்ன ஆச்சு? மக்கள் வேதனை | Chinnangudi | Rain | Sea Wave
₹26 கோடி திட்டம் என்ன ஆச்சு? மக்கள் வேதனை | Chinnangudi | Rain | Sea Wave
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ளது சின்னங்குடி மீனவ கிராமம். 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு அலைகளின் சீற்றத்தினால் கிராமத்துக்குள் கடல்நீர் புகுந்து. கடற்கரையில் அமைந்துள்ள நொண்டி வீரன், கன்னியம்மன் கோயில்களில் மணல் நிரம்பி காணப்படுகிறது. மின்கம்பம் முறிந்து விழுந்துள்ளது. உயர் மின் கோபுரத்தில் பொருத்தப்பட்ட லைட் கீழே விழுந்தது. கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் புதிதாக அமைக்கப்பட்ட சுடுகாட்டு பாதை சேதமடைந்தது. வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுவரை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
நவ 28, 2024