காங்கிரஸ் தோல்வியின் ரகசியம்: டில்லியை அதிரவைத்த பகீர் பின்னணி Congress | Fund Scam | Election
சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 இடங்களில் மட்டுமே, காங்கிரஸ் வெற்றி பெற்றது.
தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய, டில்லி காங்கிரஸ் மேலிடம் சார்பில், உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது.
குழுவில் முன்னாள் எம்.பி. ஜெயகுமார், மாநில நிர்வாகிகள் சொர்ணா சேதுராமன், எஸ்.எம்.இதயதுல்லா உட்பட 5 பேர் நியமிக்கப்பட்டனர்.
இக்குழு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்க திட்டமிட்டது.
அனைத்து தொகுதிகளிலும் கருத்து கேட்பது சாத்தியமற்றது என்பதால், தோல்வி அடைந்த 23 தொகுதிகளில் மட்டுமே விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டது.