உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தொண்டர்கள் கொந்தளிப்பின் பின்னணி என்ன? | Congress | Party Posting

தொண்டர்கள் கொந்தளிப்பின் பின்னணி என்ன? | Congress | Party Posting

காங்கிரசின் தலைவர் பொறுப்பு பல ஆண்டுகளுக்கு பின் இப்போது நேரு குடும்பம் அல்லாத ஒருவரிடம் உள்ளது. ஆனாலும் தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னை தனியாக அடையாளப்படுத்த முடியவில்லை. நேரு குடும்பத்தின் தீவிர விசுவாசியாகவே காட்டிக் கொள்கிறார். காங்கிரசில் நீண்ட காலமாகவே சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே முக்கியமான பதவிகள் கிடைக்கின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு. கார்கே தலைவர் பொறுப்புக்கு வந்த பின் இதில் மாற்றம் ஏற்படும் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. சமீபத்தில் பல்வேறு மாநிலங்களுக்கான காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருமே, ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு வேண்டியவர்கள். பூபேஷ் பாகேல், மீனாட்சி நடராஜன், கே.ராஜு போன்ற புதிய நிர்வாகிகள், ராகுல், பிரியங்காவின் தீவிர விசுவாசிகள். இதனால் விரக்தி அடைந்துள்ள உண்மை தொண்டர்கள் போஸ்டர் ஒட்டவும், கூட்டம் சேர்க்கவும் மட்டும் தான் நாங்கள் தேவைப்படுகிறோம். பதவி மட்டும் ஜால்ராக்களுக்கு போய் விடுகிறது என புலம்புகின்றனர். என்ன தான் நேரு குடும்பத்தினர் தலைமை பொறுப்பில் இல்லை என்றாலும், கட்சியில் அவர்களுக்கு வேண்டியவர்களை தவிர, வேறு யாரும் வளர முடியவில்லை என்கின்றனர்.

பிப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !