/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அண்ணாமலையிடம் வீடு கேட்டு கோரிக்கை வைத்த மக்கள் | Cyclone Fengal | Annamalai Cuddalore Visit
அண்ணாமலையிடம் வீடு கேட்டு கோரிக்கை வைத்த மக்கள் | Cyclone Fengal | Annamalai Cuddalore Visit
களத்துக்கு வந்த அண்ணாமலை கையை பிடித்து மக்கள் கோரிக்கை தென் பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்ட அளவுக்கு அதிகமான நீர் காரணமாக கடலூரில் பல கிராமப்பகுதிகள் பாதிப்படைந்தது. பாதிப்புக்குள்ளான பகுதிகளை தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை இன்று பார்வையிட்டார். கடலூர் திடீர் குப்பம் பகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று அவர்களது குறைகளை கேட்டார். இடிந்து சேதமான வீடுகளை உள்ளே சென்று பார்வையிட்டார். வீடுகளை இழந்த மக்கள் அண்ணாமலையிடம் வீடு கேட்டு கோரிக்கை வைத்தனர். மத்திய அரசு திட்டத்தின் கீழ் உங்களுக்கு வீடுகள் வழங்கும் வாய்ப்புகள் உள்ளது. இது தொடர்பாக எங்களது கட்சியினர் உங்களை சந்திப்பார்கள் என அண்ணாமலை ஆறுதல் கூறினார்.
டிச 03, 2024