2026 தேர்தல் வரை லிஸ்ட் போட்டும் வேஸ்ட் | DMK | Bjp | All party meeting | Lok Shaba
எல்லாம் ஒரு அளவுக்கு தான் ப்ரோ! திமுகவுக்கு எதிராக திரும்பும் கத்தி நாடு முழுதும் லோக்சபா தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தமிழகத்தில் மட்டும் எட்டு லோக்சபா தொகுதிகள் குறையும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கட்சி பாகுபாடு இன்றி தமிழக உரிமையை மீட்டெடுக்க வரும் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறுசீரமைப்பு முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் தென் மாநிலங்களில் உள்ள லோக்சபா தொகுதிகளும் குறையும் வாய்ப்பு உள்ளது. எனவே தென் மாநிலங்களிலும் இப்பிரச்னையை முன்னிறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டும் என திமுக தலைமை கருதுகிறது. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு, தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் ராமராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து தென்மாநில முதல்வர்களையும், அங்குள்ள பாஜ எதிர்ப்பு தலைவர்களையும் சந்தித்து பேசும் திட்டமும் திமுகவுக்கு உள்ளது. விரைவில் தமிழக அமைச்சர்கள் குழு அங்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. 2026 தமிழக சட்டசபை தேர்தல் வரை, மத்திய அரசுக்கு எதிரான பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்த திமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் மனித சங்கிலி, கையெழுத்து இயக்கம் மற்றும் தென்மாநில தலைநகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்படித்தான் கோவிட் காலத்தில் இந்தியா முழுதும் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சொல்லி கோபாலபுரம் வீட்டின் முன் ஸ்டாலின் குடும்பத்தினர் திரண்டு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். ஆனால் திமுக ஆட்சி அமைந்ததும், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தாமல், டாஸ்மாக் வருமானத்தை பெருக்கிக் கொண்டிருக்கின்றனர். எந்த கருத்திலும் உறுதியாக இல்லாமல் பெயரளவுக்கு மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவது திமுகவின் வாடிக்கை. அதே போல தான் இப்போதும் தொகுதி மறுசீரமைப்புக்காக மனித சங்கிலி போராட்டம் நடத்த திமுக அழைக்கிறதோ என சந்தேகம் தெரிவிக்கின்றனர் எதிர்கட்சியினர்.