/ தினமலர் டிவி
/ அரசியல்
/ லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாத எ.வ. வேலு | EV Velu Summons | DVAC Investigation
லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாத எ.வ. வேலு | EV Velu Summons | DVAC Investigation
2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சியில் எ.வ. வேலு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது நெடுஞ்சாலைத்துறையில் சாலைகளை அமைக்காமலேயே, அமைத்ததாகக் கூறி கணக்குக் காட்டி அரசு பணத்தை முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் உள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஜூன் 25ல் எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் வீடு உட்பட மொத்தம் 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஜூலை 03, 2026