/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதிகாரிகளின் கூட்டு கொள்ளை; அம்பலப்படுத்திய லோக் ஆயுக்தா | Karnataka clerk earns 30 crore
அதிகாரிகளின் கூட்டு கொள்ளை; அம்பலப்படுத்திய லோக் ஆயுக்தா | Karnataka clerk earns 30 crore
கர்நாடக மாநில அரசின் கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் எழுத்தராக பணியாற்றியவர் கலகப்பா நிடகுண்டி Kalakappa Nidagundi. இவரது பணிக் காலத்தில், 15 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் பெற்று வந்துள்ளார். இவர் பணியாற்றிய அலுவலகத்தில் பல்வேறு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. ஊழலில் கலகப்பாவுக்கும் தொடர்பு இருப்பது தெரிந்ததால் சமீபத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது வீடு, வங்கிக் கணக்குள், உறவினர்களின் பெயரிலான சொத்துக்கள் குறித்து லோகாயுக்தா அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆக 01, 2025