/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கொல்கத்தா டாக்டர் சம்பவம்: மாஜி முதல்வரை நெருங்கும் ED | Kolkata Doctor Case
கொல்கத்தா டாக்டர் சம்பவம்: மாஜி முதல்வரை நெருங்கும் ED | Kolkata Doctor Case
கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஆகஸ்ட் 9ல் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். போலீசுடன் தன்னார்வலராக வேலை பார்த்த சஞ்சய் ராய் என்ற கொடூரனை போலீஸ் கைது செய்தது. இந்த வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கிறது. சம்பவம் நடந்த அரசு மருத்துவமனையில் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக மருத்துவமனையில் பல நிதி முறைகேடுகள் நடந்துள்ளது. முறைகேடு பற்றி பெண் டாக்டர் கண்டுபிடித்து விட்டதால் அவர் கொலையில் சதி இருக்கலாம் என்று சக பயிற்சி டாக்டர்கள் கூறுகின்றனர்.
செப் 12, 2024