மணிப்பூர் கலவரம் பற்றி பிரதமர் மோடி விளக்கம் | Manipur violence | Rajya Sabha | PM Modi
மணிப்பூர் கலவரத்தில் அரசியல் காங்கிரசை மக்கள் நிராகரிப்பர் ஜனாதிபதிஉரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான விவாதத்தில் லோக்சபாவில் நேற்று பிரதமர் மோடி பேசினார். அப்போது, மணிப்பூர் கலவரம், நீட் முறைகேடு பிரச்னைகளை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இன்று ராஜ்ய சபாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, மணிப்பூர் கலவரம் பற்றி குறிப்பிட்டார். மணிப்பூரில் அமைதியை திரும்ப கொண்டு வருவதற்கான எல்லாவித முயற்சிகளையும் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்து வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாரக்கணக்கில் மணிப்பூரில் முகாமிட்டு அமைதி பேச்சு வார்த்தை நடத்தினார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக 11 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 500க்கு அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.