பதில் சொல்லாமல் வழி இல்லை! மக்கள் ஆவேசம் | Minister Rajendran | Mettur | Salem Protest
4 வருசமா கேக்குறோம்..! அமைச்சர் கார் முற்றுகை கடும் வாக்குவாதம் முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரை அமைச்சர் ராஜேந்திரன் ஏரிகளுக்கு திறந்து விட்டார். வாக்குப்பட்டி ஏரியை பார்வையிட சென்ற போது சாணாரப்பட்டி ஊராட்சி லெனின் நகர் பகுதி மக்கள் அமைச்சர் காரை வழிமறித்து முற்றுகையிட்டனர். சாலை பழுதடைந்து 4 ஆண்டுகள் ஆகியும் சரி செய்து தரவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. பதில் சொல்லாமல் வழிவிட மாட்டோம் என கடும் வாக்குவாதம் செய்தனர். உடன் வந்த எம்பி செல்வகணபதி, கலெக்டர் பிருந்தா தேவியிடமும் முறையிட்டனர். நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், 2 மாதங்களில் சாலை வசதி செய்து தருவேன் என உறுதி அளித்த அமைச்சர், மக்களை சமாதானம் செய்து கிளம்பி சென்றார்.