/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சொன்னதை திமுக செய்யாவிட்டால் பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கை | Mk stalin | DMK
சொன்னதை திமுக செய்யாவிட்டால் பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கை | Mk stalin | DMK
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் 5 அகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். இவர்கள், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து, திமுக அரசை கண்டித்து, அனல் மின் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். திமுக ஆட்சிக்கு வருவதற்குமுன்பு, பொதுத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் உள்ள தொழிலாளர்களை நிரந்தரம் ஆக்குவோம் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை என்று கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர்.
மார் 25, 2025