முன்னாள் திமுக இளைஞரணி நிர்வாகிக்கு பவர்புல் பதவி | DMK | MKstalin | TNGovt | Annamalai
தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனராக முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமானவரான, ஹாசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டிருக்கிறார். திமுக இளைஞரணி துணை செயலாளர் பதவியில் இருந்த அவரை ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீலாக நியமித்தனர். மூன்று ஆண்டுகள் கடந்ததும், அவரை துறை இயக்குனராக நியமித்திருக்கிறார்கள். ஜின்னாவை இந்த பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே ஆறு மாதங்களாக அப்பதவிக்கு யாரையும் நியமிக்காமல் இருந்திருக்கிறார் ஸ்டாலின். தமிழகத்தில் எத்தனையோ திறமை வாய்ந்த மூத்த வக்கீல்கள், குற்ற வழக்குகள் துறை இணை, துணை இயக்குனர்கள் என தகுதி வாய்ந்தவர்கள் இருக்கும்போது தங்களுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக அரசு பதவி வழங்கியிருப்பது திமுகவின் அதிகார துஷ்பிரயோகம். தமிழகம் முழுதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதும், பல குற்றங்களில் திமுகவினருக்கு நேரடி தொடர்பு இருப்பதும் வெளிப்படையாக தெரிய வருகிறது. இந்த சூழலில் ஒட்டு மொத்த குற்ற வழக்குகளை கையாளும் முக்கிய பொறுப்பில், திமுக இளைஞரணி துணை செயலாளராக இருந்த ஒருவரை நியமித்திருப்பது திமுகவின் நோக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.