நாட்டாமை இந்தியாவிடம் வந்த அடுத்த பஞ்சாயத்து Modi to end war Russia vs Ukraine | Israel vs Palestine
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல், பாலஸ்தீன் போர் வெடித்தது. இஸ்ரேல் வீரர்களும், ஹமாஸ் அமைப்பினரும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இஸ்ரேல் தரப்பில் இதுவரை 1,200 பேர் மரணம் அடைந்துள்ளனர். 250 பேரை ஹமாஸ் பிணை கைதிகளாக பிடித்து சென்றது. அதே நேரம் பாலஸ்தீன் தரப்பில் 40 ஆயிரம் பேர் மரணம் அடைந்து இருப்பதாக இஸ்ரேல் கூறி உள்ளது. 11 மாதங்கள் கடந்தும் போர் நீடிக்கிறது. போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எடுத்து வரும் முயற்சிகள் இதுவரை பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் தான் போரை நிறுத்த இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று பாலஸ்தீனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியாவுக்கான பாலஸ்தீன் தூதர் அட்னன் அபு அல்ஹைஜா Adnan Abu Al-Haija வெளிப்படையாக பேட்டி அளித்தார்