வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நேற்று கரூரில் பேசும் போது திமுகவின் ஐந்து வருட ஆட்சியில் நடந்த ஊழல்கள் தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கிறது என்றும் தனது ஆட்சியில் ஊழலே இல்லை என்றும் பெருமையாக கூறி இருக்கிறார். அவர் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளை பார்ப்பதில்லை என இதிலிருந்து தெரிகிறது. அனு தினமும் அரசு ஊழியர்களின் ஊழல் நடவடிக்கை செய்திகளை பத்திரிகையில் படித்தவர்களும் தொலைக்காட்சியில் பார்த்தவர்களும் தமிழகத்தில் ஊழல் எள்ளளவும் குறையவில்லை அல்லது குறைய வாய்ப்பில்லை என புரிந்து கொண்டிருப்பார்கள். இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுகவில் ஊழல் செய்த பலரையும் தன் கட்சியில் சேர்த்ததன் மூலம் அந்த இரண்டு கட்சிகளை இவரே தூய்மையாக்கி விட்டார். எனவே எப்போது இடைத் தேர்தல் நடந்தாலும் தவெகவை விட இரண்டு திராவிட கட்சிகளே பரவாயில்லை என் மக்கள் மனம் மாறி அவர்களுக்கு மீண்டும் வெற்றி வாய்ப்பு கிடைக்க ஒரு சந்தர்ப்பத்தை இவரே உருவாக்கி தந்துள்ளார்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு, இன்று சூரியனாய் உதிர்த்து, இரட்டை இலையாய் துளிர்த்து, தாமரையாய் மலர்ந்து உள்ளதை முதல்வரின் பேச்சு உணர்த்துகிறது....
போற போக்கை பார்த்தால் திமுக கூட லஞ்சம் வாங்குவதை எதிர்த்து பேச வேண்டிய சூழ்நிலை வந்து விடும் போல இருக்கு.