/ தினமலர் டிவி
/ அரசியல்
/ எம்பிக்கள் வருகைப்பதிவு செய்ய சீட்டுக்கு வந்தே ஆக வேண்டும் Parliament | digital attendance
எம்பிக்கள் வருகைப்பதிவு செய்ய சீட்டுக்கு வந்தே ஆக வேண்டும் Parliament | digital attendance
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 21ல் தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடக்கிறது. கூட்டத் தொடரின் போது லோக் சபா வரும் எம்.பி.க்கள் தங்கள் வருகையை புதிய முறையில் பதிவு செய்யும் முறை கொண்டுவரப்பட இருக்கிறது. கடந்தாண்டு லோக் சபாவுக்கு வெளியே( லாபியில் ) டேப்-லெட்டுகளில் டிஜிட்டல் பேனாவில் எம்.பி.க்கள் வருகையைப் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே நேரத்தில், அதிக எம்.பி.க்கள் வரும்போது, வருகையை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் சிலர் வருகையை பதிவு செய்யாமல் லோக்சபா சென்றனர்.
ஜூலை 15, 2025