/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழகமே எதிர்பார்த்த பொள்ளாச்சி வழக்கில் வெளியானது தீர்ப்பு | Pollachi Case | Coimbatore Court
தமிழகமே எதிர்பார்த்த பொள்ளாச்சி வழக்கில் வெளியானது தீர்ப்பு | Pollachi Case | Coimbatore Court
பொள்ளாச்சியில் 2019ல் நடந்த பாலியல் வழக்கு நாட்டையே அதிர வைத்தது. கல்லுாரி மாணவி மற்றும் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய காட்சிகள் அனைவரையும் பதைபதைக்கச் செய்தன. சிபிஐ விசாரணை நடத்திய இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு, ஹெரன்பால், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 2019 மே 21ல் கோவை மகளிர் கோர்ட்டில் சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மே 13, 2025