பல கோடி மதிப்புள்ள ஆபரணங்கள் கணக்கெடுப்பு Puri Jaganath Temple | Odisha | Ratna Bandar
உலக புகழ்பெற்ற ஒடிசாவின் புரி ஜெகநாதர் கோயிலின் தரைத் தளத்தில் ரத்ன பந்தர் என்னும் பொக்கிஷ அறை உள்ளது. இங்கு பழங்கால தங்க, வைர, வைடூரிய நகைகள், நவ ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் உள்ளன. 1978ல் இந்த பொக்கிஷ அறை திறக்கப்பட்டு நகைகள் கணக்கெடுக்கும் பணிகள் 70 நாள்கள் நடைபெற்றன. அப்போது 128 கிலோ எடையில் 454 தங்க பொருள்கள், 221 கிலோ எடையுள்ள 293 வெள்ளி பொருள்கள் முதலானவை கணக்கெடுப்பு பட்டியலில் இருந்தன அதன் பிறகு பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் களத்திலும் எதிரொலித்து பேசு பொருள் ஆனது. பாரதிய ஜனதா இந்த பிரச்னையை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தியது. பாஜ ஆட்சிக்கு வந்தால் பொக்கிஷ அறையை திறந்து நகைகளை கணக்கெடுப்போம் என தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடியும் அறிவித்தார்.