உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மோடி பற்றி ராகுல் அவதூறு: தேர்தல் அதிகாரியிடம் பாஜ புகார் Rahul |should apologize |bjp-petition|

மோடி பற்றி ராகுல் அவதூறு: தேர்தல் அதிகாரியிடம் பாஜ புகார் Rahul |should apologize |bjp-petition|

நவம்பர் 6-ம்தேதி பீகார் சட்ட சபைக்கு முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தர்பாங்கா நகரில் நேற்று பிரசாரம் செய்தார். அவர் பேசும்போது, பிரதமர் மோடிக்கு உங்கள் ஓட்டுகள் மட்டும் வேண்டும். நடனம் ஆடினால் ஓட்டு போடுவேன் என நீங்கள் கூறினால் உடனே அவர் பரதநாட்டியமே ஆடுவார் என ராகுல் கிண்டலடித்தார். இந்த பேச்சுக்கு பீகார் முசாபர்பூர் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். ராகுல் பேச்சுக்கு பாஜ தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். பீகார் மாநில பாஜ சார்பில் நிர்வாகி பிந்தியாச்சால் ராய் Bindhyachal rai, பீகார் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது ராகுலின் பேச்சு தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளையும் மீறுவதாக உள்ளது. பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை குறைப்பதாக இருக்கிறது. பிரதமர் மீது அவதூறு பரப்பும் வகையிலும், தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையிலும் ராகுல் பேசி உள்ளார். ராகுலிடம் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அத்துடன் ராகுல் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க உத்தரவிட வேண்டும். மேற்கொண்டு ராகுல் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என பாஜ அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது. #Rahul#biharElection #modi

அக் 30, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
அக் 31, 2025 07:39

பிரச்சாரத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மோடிஜியை பற்றியும், பி ஜே பி பற்றியும் அநாகரீகமான பிரச்சாரத்தை மேற்கொள்வதே தன்னுடைய கொள்கையாக கொண்டுள்ளார். தடை செய்யப்படுவது மட்டுமல்ல தண்டிக்க பட வேண்டிய விஷம தனமான பிரச்சாரம்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை