/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நகரையே மூழ்கடித்த ஆற்று வெள்ளம்: பாதித்த மக்கள் மறியல் | River flood | Area affect | Flood
நகரையே மூழ்கடித்த ஆற்று வெள்ளம்: பாதித்த மக்கள் மறியல் | River flood | Area affect | Flood
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் சாத்தனூர் அணை வேகமாக நிரம்பியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கனவே மழையால் இரு கரைகளை தண்ணீர் தொட்டு சென்ற நிலையில், சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளம் கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டில் உள்ள கரையோர பகுதியான அண்ணா நகருக்குள் புகுந்து வீடுகளை மூழ்கடித்தது.
டிச 02, 2024