/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தற்கொலைப்படை தாக்குதலில் கருகிய பிஞ்சுகள்: 38 பேர் படுகாயம் Blast | school bus | Pakistan
தற்கொலைப்படை தாக்குதலில் கருகிய பிஞ்சுகள்: 38 பேர் படுகாயம் Blast | school bus | Pakistan
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குஸ்தார் மாவட்டத்தில் ராணுவத்துக்கு சொந்தமான பள்ளி பஸ் மீது, ஐஇடி வெடிகுண்டுகள் நிரப்பிய கார் மோதி தாக்குதல் நடத்தப்பட்டது. பள்ளிக்கு பஸ் சென்று கொண்டு இருந்தபோது, இந்த தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 குழந்தைகள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மற்ற குழந்தைகள் 38 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை குவெட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு சென்றனர்.
மே 21, 2025