ஒப்புதல் தர கவர்னர் தாமதம் செய்தது ஏன்?: நீதிபதிகள் கேள்வி | Senthil balaji| TN Governor| Tn govt
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை சிறப்பு கோர்ட்டில் நடைபெறுகிறது. இந்த மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக கூறி, செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்தாண்டு கைது செய்தது. ஜாமின் கிடைக்காததால் ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ளார். இச்சூழலில், வேலை வாங்கி தருவதாக நடந்த மோசடியில் பாதிக்கப்பட்ட ஆரணியை சேர்ந்த பாலாஜி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை ஓராண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும்; ஊழல் வழக்குகளை விசாரிப்பதில் அரசு செய்யும் தாமதம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும்; செந்தில் வழக்கில் நடுநிலையான அரசு வக்கீலை நியமிக்க வேண்டும் என கோரி இருந்தார்.