உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஒரே பாணியில் சம்பவம்? இன்னும் எத்தனை ஊர் பாக்கி! | Sivagangai Police | Investigation | Robbery

ஒரே பாணியில் சம்பவம்? இன்னும் எத்தனை ஊர் பாக்கி! | Sivagangai Police | Investigation | Robbery

வகங்கை சிங்கம்புணரியை சேர்ந்தவர் மோகன். இவர் தனது நண்பர் சரவணக்குமாரிடம் கடந்த செப்டம்பர் 10ம் தேதி 1லட்சத்து 20 ஆயிரம் பணம் கொடுத்து அங்குள்ள வங்கி ஒன்றில் செலுத்த சொன்னார். சரவணன் வங்கிக்குள் சென்றபோது ஸ்கூட்டரில் இருந்த பணம் திருடு போனது. இதுகுறித்த புகாரில் சிங்கம்புணரி போலீஸார் விசாரித்து வந்தனர். விருதுநகரில் சில நாட்களுக்கு முன் வங்கியில் பணம் போட வந்தவரின் 5 லட்சமும் இதே போல் திருடு போனது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 2 பேரை விருதுநகர் போலீசார் அடையாளம் கண்டனர். வாகன சோதனையில் வசமாக சிக்கிய அந்த 2 பேரிடமும் தொடர் விசாரணை நடத்தினர். ஆந்திரா சித்தூரை சேர்ந்த நாகராஜ், வெங்கடேஷ் என்பது தெரிய வந்தது.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை