பெங்களூரு மக்களே மன்னித்து விடுங்கள் சிவகுமார் உருக்கம்
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்துக்கு உரிய ஏற்பாடுகளை செய்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பெங்களூரு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார். பலி எண்ணிக்கையை இப்போது சரியாக சொல்ல முடியாது. மக்கள் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்; எல்லாவற்றையும் இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கிறோம் என சிவகுமார் கூறினார்.
ஜூன் 04, 2025