/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அறநிலைய துறைக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி: திணறும் அதிகாரிகள் | HR&CE | Temple Audit
அறநிலைய துறைக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி: திணறும் அதிகாரிகள் | HR&CE | Temple Audit
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் ஆண்டு வருவாய், செலவினங்கள் தொடர்பான கணக்குகளின் தணிக்கை அறிக்கை தயாரிக்க வேண்டும். அதனை அறநிலைய துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என மயிலாப்பூரைச் சேர்ந்த ரமேஷ் 2023ல் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலைய துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜரானார். தணிக்கை அறிக்கைகளை, அந்தந்த கோயில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, 2024 டிசம்பர் 19ல் அறநிலைய துறை கமிஷனர் உத்தரவிட்டார்.
ஆக 31, 2025