/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 52 உயிர்களை காப்பாற்றி உயிரை விட்ட அரசு பஸ் டிரைவர் | bus driver | chest pain | Tenkasi
52 உயிர்களை காப்பாற்றி உயிரை விட்ட அரசு பஸ் டிரைவர் | bus driver | chest pain | Tenkasi
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து இன்று காலை நாகர்கோவிலுக்கு அரசு பஸ் புறப்பட்டது. புளியங்குடியை சேர்ந்த டிரைவர் மாரியப்பன் பஸ்சை ஓட்டினார். நெல்கட்டுசெவலையை சேர்ந்த கண்டக்டர் ராமராஜாவும் பணியில் இருந்தார். பஸ் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே ஏர்வாடி பஸ் ஸ்டாண்டில் ஆட்களை இறக்கி ஏற்றிவிட்டு தெற்கு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவர் மாரியப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதை உணர்ந்த மாரியப்பன் உடனே பஸ்சை ஓரங்கட்டி நிறுத்தினார். அடுத்த நொடியே டிரைவர் சீட்டில் சாய்ந்தார்.
ஏப் 04, 2025