/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நொறுங்கிய பஸ், 5 பேருக்கு சோகம்! 29 பயணிகள் சீரியஸ் | Thiruttani | Bus Accident
நொறுங்கிய பஸ், 5 பேருக்கு சோகம்! 29 பயணிகள் சீரியஸ் | Thiruttani | Bus Accident
திருவள்ளூர் ஸ்ரீகாளிகாபுரம் பகுதியிலிருந்து திருத்தணி நோக்கி 40க்கும் அதிகமான பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இன்று மாலை 3.30 மணி அளவில் கே.ஜி. கண்டிகை பகுதியில் வந்து கொண்டிருந்தது. அதே நேரம் எதிர் திசையில் கே.ஜி.கண்டிகை பகுதியில் உள்ள கல்குவாரிக்கு செல்லும் டிப்பர் லாரி ஒன்று வந்தது. திடீரென அரசு பஸ்சும், லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதின. இந்த காட்சிகள் அங்குள்ள பெட்ரோல் பங்க் சிசிடிவியில் பதிவானது.
மார் 07, 2025