உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மத்திய அரசு மீது பழிபோடும் திமுக அரசியல் இனி எடுபடாது: வானதி | vanathi | BjpMlA | NEP | DMK

மத்திய அரசு மீது பழிபோடும் திமுக அரசியல் இனி எடுபடாது: வானதி | vanathi | BjpMlA | NEP | DMK

மத்திய அமைச்சர் சொன்னதை திரித்து அரசியல் செய்வதா! கொந்தளிக்கும் வானதி பா.ஜ எம்எல்ஏ வானதி சீனிவாசனின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, அரசு பள்ளிகளை மேம்படுத்த பி.எம். ஸ்ரீ என்ற திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்து நிதி வழங்கி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம். ஆனால், திட்டத்திற்கான நிதி மட்டும் வேண்டும் என்று திமுக அரசு கேட்கிறது. திட்டத்தை செயல்படுத்தினால் தான், சட்டப்படி நிதி வழங்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறி இருக்கிறார். இதை வழக்கம்போல திரித்து, திமுகவினர் அரசியல் செய்து வருகின்றனர். புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க சொல்வது, இந்தி திணிப்பு என்றும், மும்மொழி கொள்கை திணிப்பு என்றும் திமுகவினர் கூறுகின்றனர். இது அப்பட்டமான பொய். புதிய தேசிய கல்விக் கொள்கையில், இந்தி மொழி எங்கும் திணிக்கப்படவில்லை. சிபிஎஸ்இ பள்ளிகள் மும்மொழி கொள்கையை பின்பற்றும் பள்ளிகள் தான். ஸ்டாலின் குடும்பத்தினர் உட்பட திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி தான் இருக்கிறது. சில பள்ளிகளில் 4வது மொழியாக சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளையும் வைத்திருக்கிறார்கள். ஆனால், பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரும் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மும்மொழி கொள்கை கூடாது என்கிறது திமுக அரசு. இது, ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும் செயல் அல்லவா? பணம் இருப்பவர்கள் 3வது மொழியை கற்க வசதிகளை ஏற்படுத்தி விட்டு ஏழை மாணவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பை, மத்திய அரசு உருவாக்கிக் கொடுத்தாலும், அதை தடுப்பது சமூக அநீதி. இதை மறைப்பதற்காக மத்திய அரசு மீது பழி போட்டு மொழி அரசியலையும், பிரிவினைவாத அரசியலையும் முன்னெடுக்க நினைத்தால், அது இனி வெற்றி பெறாது எனவும் வானதி கூறியுள்ளார்.

பிப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ