சுப்ரீம் கோர்ட் வரை போன அறநிலையத்துறை: வானதி பகீர் | Vanathi Srinivasan | HRCE
23,500 கோயில்களில் நடந்துள்ள சதி திமுகவின் திட்டம் தெரிஞ்சு போச்சு! 23,500 கோயில்களில் அறங்காவலர் குழுக்களை நியமிக்க முடியவில்லை என்றால் இந்து சமய அறநிலையத்துறை எதற்கு? என பாஜ எம்எல்ஏ வானதி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் 43,631 இந்து கோயில்கள், 45 திருமடங்கள், மடங்களுடன் இணைந்த 69 கோயில்கள், 2,392 அறக்கட்டளைகள், 22 சமண கோயில்கள் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோயில்கள் அறங்காவலர்கள் குழு அமைக்கப்பட்டு அதன் மூலமே நிர்வகிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான கோயில்கள் அறங்காவலர்கள் குழு அமைக்கப்படவில்லை. இதனால் இந்து கோயில்களை சீரழிந்து வருவதை தடுக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.