/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட் | West Bengal | SC | Teacher Scam Case
மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட் | West Bengal | SC | Teacher Scam Case
மேற்கு வங்கத்தில் 2016ல் மாநில அளவிலான ஆசிரியர் பணியிட தேர்வில் 23 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த தேர்வில் 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆசிரியர் பணியிட தேர்வின் மூலம் நடந்த இந்த நியமனத்தில் லட்சக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு பலருக்கும் வேலை வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. முறைகேடுகள் தொடர்பாக கொல்கத்தா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அம்மாநில கல்வி அமைச்சர் உட்பட உயர்மட்டத் தலைவர்கள் பலர் இந்த வழக்கில் சிக்கினர்.
ஆக 21, 2025