A+ ரவுடி சீசிங் ராஜா தப்பியது எப்படி? பரபர நிமிடம் | Arcot suresh vs Armstrong | Rowdy Seizing Raja
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை மொத்த தமிழகத்தையும் உலுக்கியது. கொலை நடந்து 20 நாள் ஆகி விட்டது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய திருப்பத்தை இந்த வழக்கு சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்க்கவே ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்தது போலீஸ் விசாரணையில் உறுதியானது. முக்கிய குற்றவாளிகள் உட்பட இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் மையப்புள்ளியாக ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, மைத்துனர் அருள், காதலி அஞ்சலை ஆகியோர் இருந்தாலும், பெண் ரவுடி மலர்கொடி, பிரபல தாதா சம்போ செந்தில், ஏ பிளஸ் ரவுடி சீசிங் ராஜா உள்ளிட்டோர் தொடர்பும் இருப்பது போலீசையே அதிர வைத்தது.