தலைமறைவானவரை தேடுது போலீஸ்; கட்சியை விட்டு தூக்கியது பாஜ | ArmStrong |
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட திருவேங்கடம், என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், அதிமுகவை சேர்ந்த வக்கீல் மலர்கொடி, அவரது உதவியாளர் தாமகவை சேர்ந்த வக்கீல் ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் வடசென்னை பாஜ மேற்கு மாவட்ட துணை தலைவரான அஞ்சலையும் சம்பந்தப்பட்டு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஜூலை 18, 2024