உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / வேலூர் மயானத்தில் நடப்பது என்ன? உறவினர்கள் பகீர் | crematoriums | Vellore

வேலூர் மயானத்தில் நடப்பது என்ன? உறவினர்கள் பகீர் | crematoriums | Vellore

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட அம்மானங்குட்டையில் மயானம் உள்ளது. உடல்களை புதைக்க தனி இடமும், எரிக்க தகன மேடையும் இருக்கிறது. எரிவாயு மூலம் உடல்களை எரிக்கும் அமைப்பு புதிதாக கட்டப்பட்டது. கடந்த 6 மாதங்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனை பராமரிக்க தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. ராஜேஷ் என்பவர் பிணங்களை எரிக்கும் பணி செய்து வருகிறார். இங்கு குமார் என்பவர் இறந்த அவரது தங்கை உடலை எரிக்க தனது உறவினர்களுடன் வந்துள்ளார். மாயன ஊழியர் ராஜேஷ் கட்டணம் வாங்கிக்கொண்டு உடலை எரிப்பது போல தகன மேடையில் வைத்துள்ளார். பின்னர் உறவினர்களை வெளியே போக சொல்லி இருக்கிறார். அவர்களும் வெளியே சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் தகன மேடை புகை போக்கில் இருந்து புகை வரவில்லை. சந்தேகமடைந்த குமார் உள்ளே சென்று பார்த்த போது உடலை எரிக்காமல் பாதி எரிந்த நிலையில் தகன மேடையில் இருந்து வெளியே இழுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆந்திரமடைந்த குமாரின் உறவினர்கள் மயான ஊழியர் ராஜேசை வெளுத்து வாங்கினர். அந்த நேரம் பார்த்து பார்வதி என்கிற மூதாட்டியின் உடல் அங்கே தகனம் செய்ய கொண்டுவரப்பட்டது. மயானத்தில் நடந்த குளறுபடிகளை பார்த்து மூதாட்டியின் உறவினரே அங்கே குழி தோண்டி உடலை புதைத்துவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மயானத்தில் 10க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மாநகராட்சி அதிகாரி முருகன் பாதிக்கப்பட்டவர்களிடன் விசாரணை நடத்தினார்.

ஏப் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை