வெள்ளம் வடிந்து வீடுகளுக்கு சென்றவர்களுக்கு அதிர்ச்சி | Rain | Cuddalore
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலூர் குறிஞ்சி நகர், முல்லை நகர், குமரப்பன் நகர் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அப்பகுதி மக்களை முன்னெச்சரிக்கையாக மண்டபங்களில் தங்க வைத்தது மாவட்ட நிர்வாகம். இப்போது வெள்ளநீர் வடிந்து வரும் நிலையில் மக்கள் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். பலரது வீடுகளில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மின்விசிறி, உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமாகி உள்ளது. சேதமடைந்த பொருட்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
டிச 04, 2024