ென்னையில் மாநகராட்சி ஆபீசில் வெடிகுண்டு வீச்சால் பரபரப்பு Chennai Corporation Office| kannaginagar c
ென்னை கண்ணகி நகரில் மாநகராட்சி அலுவலகம் செயல்படுகிறது. இது 196வது வார்டு கவுன்சிலர் அலுவலகமாகவும், இ-சேவைகள் வழங்கும் மையமாகவும் இருக்கிறது. இந்த வார்டு கவுன்சிலராக அதிமுகவை சேர்ந்த அஸ்வினி கருணா உள்ளார். டூவீலரில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். அலுவலக வளாகத்தில் அது பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். வெடிகுண்டு வீசப்பட்டதில், அலுவலக வளாகத்தில் இருந்த போர்டு, டியூப் லைட்கள், போட்டோ உள்ளிட்டவை உடைந்து சிதறி விழுந்தன. கண்ணகி நகர் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, வெடிகுண்டு வீசியவர்கள் யார் என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். #ChennaiCorporationOffice #KannaginagarCorporationOffice #ExplosiveDeviceThrown