உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / தரை இறங்கியதும் விமான ஊழியரிடம் பயணிகள் வாக்குவாதம்

தரை இறங்கியதும் விமான ஊழியரிடம் பயணிகள் வாக்குவாதம்

திருப்பதி ஏர்போர்ட்டில் இருந்து ஐதராபாத்துக்கு நேற்றிரவு இன்டிகோ விமானம் கிளம்பியது. டேக் ஆப் ஆன சில நிமிடங்களில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை பைலட்கள் கண்டறிந்தனர். தரை இறக்கப்படுவதாக அறிவித்தனர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக வானத்திலேயே வட்டமடித்த விமானம், மீண்டும் திருப்பதி ஏர்போர்ட்டிலேயே பத்திரமாக தரை இறங்கியது. பயணிகள் இறக்கி விடப்பட்டனர். உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படாததால், விமான நிறுவன ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.

ஜூலை 21, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

JeevaKiran
ஜூலை 21, 2025 11:12

அட மக்குகளா? விமான ஊழியர்களை பாராட்டுங்கள். கோளாறுடன் விமானம் சென்று, அகமதாபாத் சம்பவம் மாதிரி ஏதேனும் நிகழ்ந்திருந்தால்?


S.V.Srinivasan
ஜூலை 21, 2025 11:05

இந்த மாதிரி பொழுது போனா பொழுது விடிஞ்சா அந்த விமானத்தில் கோளாறு, இந்த விமானத்தில் விபத்து செய்திதான் வருது. மக்கள் ஒட்டுமொத்தமா விமான பயணத்தை ஓரம்கட்டிவிட்டு அந்த கால வழக்கப்படி மாட்டு வண்டியில் சவாரி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ