உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மனநல ஆலோசகரின் செயலால் அச்சத்தில் மாணவிகள் | Sexual harassment | Mental health counselor Arrested |

மனநல ஆலோசகரின் செயலால் அச்சத்தில் மாணவிகள் | Sexual harassment | Mental health counselor Arrested |

நாகை சாமந்தான்பேட்டையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் இயங்குகிறது. இங்கு பெற்றோரை இழந்த 55 பெண் பிள்ளைகள் தங்கி பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். இவர்களுக்கு சமூக நலத்துறை சார்பில் மாதம்தோறும் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. இதற்காக ஒப்பந்த அடிப்படையில் மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான் மாதா மாதம் பெண் குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை வழங்கி வருகிறார். கூடவே குட் டச், பேட் டச் குறித்தும் வகுப்பு எடுத்து வந்துள்ளார். அப்போது மாணவ மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி மன ரீதியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த விடுதி காப்பாளர் சசிகலா நாகை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி அன்னை சத்யா காப்பக மாணவிகளிடம் விசாரித்தபோது புகார் உண்மை என தெரிந்தது.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை