/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ பழங்குடியினருக்கு கட்டும் வீடுகளில் தரம் இல்லை | Pollachi | Village | Home
பழங்குடியினருக்கு கட்டும் வீடுகளில் தரம் இல்லை | Pollachi | Village | Home
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன் புதூர் பேரூராட்சிக்குட்பட்ட எருமப்பாறை, கூமாட்டி மலைக்கிராம மக்களுக்கு, பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தில் 25 வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. வீடு கட்டும் பணியில் தரம் இல்லை என மலைக்கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். அஸ்திவாரத்திற்கு சிமென்ட் கலவைக்கு பதிலாக செம்மண்ணை பயன்படுத்துகின்றனர். தரம் இல்லாமல் கட்டும் இந்த வீடுகள் எத்தனை நாட்களுக்குள் தாங்கும் என அவர்கள் கேட்கின்றனர். இது தொடர்பாக சப் கலெக்டர் கேத்தரின் சரண்யாவிடம் புகார் மனு கொடுத்தனர்.
ஜூலை 15, 2024