வீடு புகுந்து பிரபல ரவுடியை தீர்த்துக்கட்டிய கும்பல் Sivagangai |Oorkavalan |A+ History Sheeter |R
சிவகங்கை, திருப்பாச்சேத்தி அருகே மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஊர்காவலன். வயது 31. இவர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா கடத்தல், திருட்டு, சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன. A+ வகை சரித்திர பதிவேடு குற்றவாளியாக போலீஸ் கண்காணிப்பில் இருந்து வந்தார். சிறையில் இருந்த அவர், 3 தினங்களுக்கு முன்தான், ஜாமினில் வெளியேவந்தார். மாத்தூரில் உள்ள வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் ஒரு கும்பல் வீடு புகுந்து அவரை வெட்டி கொன்றது. முன்விரோதம் காரணமாக, பழிக்குப் பழி வாங்க நடந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. #Sivagangai #Thirupachethi #Mathur #Rowdy #HistorySheeter #APlusHistorySheeter #CrimeNews #BreakingNews #TamilNews #PoliceInvestigation #TamilNadu #LawAndOrder #LatestNews #CrimeUpdate