இன்றைய மதிய செய்திகள் | விஜய் இப்படி பேச கூடாது! | CM Stalin | 1 PM | 27-08-2025
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்து வருகிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தங்க கவசத்தில் அருள்பாலித்த கற்பக விநாயகரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் திருநாள் மண்டபத்தில் தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் ற்பக விநாயகர் எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்க பஞ்ச முக தீபாராதனை காட்டப்பட்டது . அதனைத் தொடர்ந்து உற்சவர் கோயிலை சுற்றி வலம் வந்து கோயில் குளக்கரையில் எழுந்தருளினார். அங்கு அங்குச தேவருக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் கோயில் திருக்குளத்தில் அங்குச தேவர் மூழ்கி எழும் தீர்த்தவாரி உற்சவம் பக்தர்கள் முன்னிலையில் விமர்சையாக நடந்தது. தொடர்த்து தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு திருக்குளத்தில் இருந்த புனிதநீர் தெளிக்கப்பட்டது.