உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / இன்றைய காலை முக்கியச் செய்திகள் | புடினிடம் மோடி வலியுறுத்தல் | 8AM | 02-09-2025

இன்றைய காலை முக்கியச் செய்திகள் | புடினிடம் மோடி வலியுறுத்தல் | 8AM | 02-09-2025

சீனாவின் தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டுக்கு இடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, பிரதமர் மோடி சந்தித்தார். சந்திப்புக்குப் பின் பேசிய மோடி, அதிபர் புடினுடனான சந்திப்பு எப்போதும் மறக்க முடியாதது என்று தெரிவித்தார். வரும் டிசம்பரில் புடினின் இந்திய வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். கடினமான காலங்களிலும் கூட இந்தியாவும், ரஷ்யாவும் ஒன்றாக நிற்பதில் இருந்து எங்கள் நட்பின் சிறப்பையும், கூட்டாண்மையின் ஆழத்தையும் அறிந்து கொள்ளலாம். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு என்பது, எங்கள் மக்களுக்கானது மட்டுமல்ல. உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கு நன்மை பயக்கக் கூடியது. மிகக் கடினமான சூழ்நிலைகளிலும், தோளோடு தோளாக நின்று பணியாற்றி வருகிறோம். உக்ரைன் உடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து நாங்கள் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். மோதல் விரைவில் முடிவுக்கு வரவேண்டும். மேலும், உக்ரைனில் நீடித்த அமைதிக்கான பாதையை விரைவாக கண்டறிய வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். சமாதானத்தை நோக்கி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். மேலும், இம்முயற்சியில் ஆக்கப்பூர்வமான முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன் என மோடி கூறினார். தொடர்ந்து புடின் கூறுகையில், ரஷ்யா - இந்தியா உறவு, அரசியலை அடிப்படையாகக் கொண்டது அல்ல, கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. இரு நாடுகளுக்கும் இடையே மிகவும் நம்பகமான உறவு உள்ளது. எங்களுக்கு இடையே பன்முக ஒத்துழைப்பு உள்ளது. இன்றைய சந்திப்பு, எங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்த மற்றொரு நல்ல வாய்ப்பாகும் என்று கூறினார்.

செப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை