செய்தி சுருக்கம் | 08 AM | 21-08-2025 | Short News Round Up | Dinamalar
மக்களுக்கு தீபாவளியன்று மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படும் என, பிரதமர் மோடி சுதந்திர தினத்தன்று அறிவித்தார். இதற்கு போட்டியாக பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பை தீபாவளி நாளில் வெளியிட தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு 2026 பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் கார்டுக்கு தலா 5,000 வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு 10,000 கோடி தேவை என்பதால் அதற்கான நிதி ஏற்பாட்டை செய்ய நிதித்துறையை அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரதமர் அறிவிப்புக்கு போட்டி போடும் வகையில் பொங்கலுக்கு இரு மாதங்களுக்கு முன்பே 5,000 வழங்கும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளது. அவசியம் இல்லாத செலவுகளை குறைத்து, நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகை செய்ய நிதித்துறையை அறிவுறுத்தி உள்ளனர் என்றார். சென்ற ஆண்டு பொங்கலுக்கு ரொக்கம் இல்லாமல் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்பட்டன.