/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ செய்தி சுருக்கம் | 08 AM | 22-01-2025 | Short News Round Up | Dinamalar
செய்தி சுருக்கம் | 08 AM | 22-01-2025 | Short News Round Up | Dinamalar
தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக ஊடுருவியுள்ள வங்கதேசத்தினர், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் போலி ஆவணங்கள் வாயிலாக வேலைக்கு சேர்ந்து, தனியார் நிறுவனங்களில் பதுங்கி உள்ளனர். தோற்றத்தில் வடமாநிலத்தவர் போல் இருப்பதால் தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு சந்தேகம் ஏற்படுவது இல்லை. சில தினங்களுக்கு முன் கோவை மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், பல்லடம் போலீஸ் நிலைய எல்லையில் சோதனை நடத்தினர். அங்கு ஊடுருவி இருந்த வங்கதேசத்தினர் 29 பேரை கைது செய்தனர். அதன்பின், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லையில் ஏழு பேர் சிக்கினர். வங்கதேசத்தினர் ஊடுருவல் குறித்து என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜன 22, 2025