இன்றைய இரவு முக்கியச் செய்திகள் |மோடி ஆலோசனை | 8 PM | 05-12-2025
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடின், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இருவரும் இரு நாட்டு உறவுகள், தொழில், வர்த்தகம், பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி விளக்கினார். செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா வந்துள்ள ரஷ்ய அபதிர் புடின் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளை வரவேற்கிறேன். இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு பன்னெடுங்காலமாக தொடர்ந்து வருகிறது. இன்றிலிருந்து சரியாக 25 ஆண்டுகளுக்கு முன், இந்தியா - ரஷ்யா இடையிலான உறவை பலப்படுத்தும் விதையை, அதிபர் புடின் விதைத்தார். புடின் தலைமையிலான ரஷ்ய அரசின் நடவடிக்கையால், இரு நாடுகள் இடையிலான உறவு தொடர்ந்து மேம்பட்டு வந்துள்ளது. தற்போது அது புதிய உச்சம் தொட்டுள்ளது. இரு நாடுகள் இடையிலான பிரிக்க முடியாத இந்த மகத்தான நட்புக்காக, ரஷ்ய அதிபர் புடினுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன். கடந்த காலங்களில் உலகம் பல்வேறு சங்கடங்களை சந்தித்துள்ளது. பல ஏற்றத்தாழ்வுகளை கண்டுள்ளது. எனினும், இந்தியா - ரஷ்யா இடையிலான நட்பு ஓர் துருவ நட்சத்திரம் போல் ஜொலிக்கிறது. இதை மேலும் வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தோம். பொருளாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதற்காக இரு நாடுகள் இடையிலான வர்த்தம் தொடர்பாக முக்கிய உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை, உரம், உணவு பொருள் பாதுகாப்பு, விசாயிகள் நலன் சார்ந்த விஷயங்களில் இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு நல்கும். இரு நாடுகளும் யூரியா உற்பத்தியில் முக்கிய முயற்சி மேற்கொண்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தை மேலும் வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எரிசக்தி துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தி, கனிமவள பயன்பாடு உள்ளிட்டவற்றிலும் முக்கிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. #IndiaRussiaMeeting| ModiPutinMeeting| Putin| PMModi