/ தினமலர் டிவி
/ செய்திச்சுருக்கம்
/ மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 27-12-2024 | District News | Dinamalar
மாவட்ட செய்திகள் மாலை 4 மணி | 27-12-2024 | District News | Dinamalar
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி மூலக்கடை பகுதியில் புல்லட் யானை முகாமிட்டுள்ளது நேற்று இரவு மூன்று வீடுகளை இந்த யானை சேதப்படுத்தியது. தொடர்ந்து இன்று காலை முதல் இந்த காட்டு யானையை கண்காணித்து மயக்கம் ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர் கால்நடை டாக்டர்கள் கலைவாணன், ராஜேஷ்குமார் மயக்க ஊசி துப்பாக்கியுடன் தயார் நிலையில் உள்ளனர். ஏற்கனவே இரண்டு கும்கி யானைகள் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளது. மீண்டும் முதுமலையிலிருந்து மற்றொரு கும்கி யானையும் வரவழைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. தேவாலா டி.எஸ்.பி. சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டிச 27, 2024