மாவட்ட செய்திகள் | 25-01 -2025 | District News | Dinamalar
புதுக்கோட்டை மாவட்டம் பத்தரசர் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வளர்மதி. கணவன் இறந்து விட்டார். மகன் மற்றும் 3 மகள்களுடன் வசித்து வருகிறார். மகன் சக்தி சோமையா வயது 14. காரைக்குடி பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்தார். நேற்று பள்ளியில் மின்சாரம் தாக்கி இறந்தார். அரசு சார்பில் 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. கூடுதல் நிதி, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை, மாணவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜன 25, 2025