மாவட்ட செய்திகள் | 26-10 -2024 | District News | Dinamalar
கரூர் மாவட்டம் சேங்கல் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது 58. இவரது மனைவி சுப்புரத்தினம். நேற்றிரவு தம்பதியினர் துாங்கினர். அப்போது 10.45 மணி அளவில் திடீரென வீட்டின் பின்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டு தம்பதி பதறி எழுந்தனர். வீட்டிற்குள் இரண்டு முகமூடி கொள்ளையர்கள் நுழைந்தனர். கையில் இருந்த கம்பி மற்றும் அருவாளை காட்டி தாலி செயின் மற்றும் வீட்டில் இருந்த பணத்தை எடுக்க சொல்லி சுப்புரத்தினத்தை ஒரு முகமூடி கொள்ளையன் மிரட்டினான். இன்னொரு முக மூடி கொள்ளையன் பீரோவை திறக்க முயன்றான். தம்பதியினர் அலறல் சத்தம் கேட்டு ரோட்டில் சென்ற அப்பகுதியை சேர்ந்த தனுஷ் வீட்டிற்குள் வந்தார்.
அக் 26, 2024