உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / செய்திச்சுருக்கம் / மாவட்ட செய்திகள் 4 மணி | 07-11-2024 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் 4 மணி | 07-11-2024 | District News | Dinamalar

பல்லடம் கரைப்புதூர் ஊராட்சி உப்பிலிபாளையத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் விஏஓ, ஆர்ஐ, தாசில்தாரிடம் புகார் கூறினர். பொதுமக்களுக்கு அதிகாரிகள் மலுப்பலான பதில் கூறி அனுப்பினர். தனியார் பணிகளை நிறுத்தாமல் வேலை செய்தனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்ட இடத்தில் தனி நபர் ஆக்கிரமித்துள்ளது குறித்து புகார் தெரிவித்தும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். பொதுமக்கள் அங்கு கூடியதால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

நவ 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி