உள்ளூர் செய்திகள்

நிழல் பேசும் நிஜம்!

மனசுக்கு பிடிச்சவன் வாசல்ல நிற்கிறான்; அவனோட போயிடணும்னு பெட்டியோட நான் வீட்டு வாசலை தாண்டினப்போ, அப்பா நெஞ்சுல அடிச்சுட்டு அழுதார். 'பிறக்கிற குழந்தை நல்லபடியா பேசிடுச்சுன்னா, அதைப் பார்த்து நீ ஏங்கிப் போயிருவே'ன்னு, ரெண்டாவது குழந்தை வேண்டாம்னு சொன்னவருடி உங்கப்பா; அவரையா துாக்கி எறிஞ்சுட்டுப் போறே?' - அப்பாவின் மனக்குமுறலை அம்மா கொட்டினாள். அன்னைக்கு பாசம் ஜெயிச்சிடுச்சு.இதோ... பத்து வருஷம் ஆச்சு. எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை. ஆனாலும், மனசுக்குள்ளே இருந்து அவனை முழுமையா என்னால துாக்கிப் போட முடியலை. ராஜீவ்; எனக்குள்ளே அவன் வாழ்றது தெரிஞ்சு அப்பப்போ வெடிச்சாலும், என் மனசை உணர்ந்தவர்; என் உணர்வுகளுக்கு மரியாதை தர்றவர்; என் கணவர். அவன் இறந்த தகவல் வந்தன்னைக்கு, துபாய்ல இருந்து என்னை இந்தியாவுக்கு அழைச்சுட்டு வந்தார். என்னோட துரதிருஷ்டம்... நான் வர்றதுக்குள்ளே அவனை மண்விழுங்கிடுச்சு. 'சுஜாதா... நீ அவனை பார்க்கணும்னா, சவப்பெட்டியை நான் திறக்கிறேன்' - ராஜீவ் உறுதியா சொன்னார்; அவர் தோள் சாய்ஞ்சு அழுதேன். மனசுல ஒரு நிம்மதி; பிறந்ததுல இருந்து வாய் பேச முடியாத என்னால, என் மனசை ரெண்டு ஆண்களுக்கு புரிய வைச்ச நிம்மதி! அன்பை உணர்த்த வார்த்தைகள் எதற்கு?படம்: சூபியும் சுஜாதாயும் (மலையாளம்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !