உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்தனைக் களம் / தாமதமாக வெடித்த இஸ்லாமிக் பாம்

தாமதமாக வெடித்த இஸ்லாமிக் பாம்

சர்வதேச அரசியலில் இந்தியாவுக்கு இது போதாத காலம் போலவே தோன்றுகிறது. ஏற்கனவே இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தகப் போரை துவங்கி இருக்கும் சூழலில், தற்போது சவுதி மூலம், இந்தியாவுக்கு செக் வைக்கும் அளவுக்கு மிக நேர்த்தியாக காய்களை நகர்த்தி இருக்கிறது பாகிஸ்தான். அண்மையில் சவுதி அரேபியாவுக்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை அந்நாட்டு பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மானுடன் மேற்கொண்டார். அதன்படி பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளில் எந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அது மற்றொரு நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்டதாகவே கருதப்படும் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 'பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை மீண்டும் துவங்கப்படும்' என, இந்தியா ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்தச் சூழலில், சவுதியுடன், பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்க, பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் ஒரே நாடு இந்தியா தான். இந்தச் சூழலில், சவுதியுடன் பாகிஸ்தான் கைகோர்த்திருப்பது சர்வதேச அரசியலில் மிகுந்த கவனத்தை பெற்றிருக்கிறது.

சீன பின்னணி

சவுதியுடன் பாகிஸ்தான் நெருக்கமாவதற்கு பின்னணியில் சீனா இருப்பதாகவே பேசப்படுகிறது. அதாவது, கடந்த 2022ம் ஆண்டு, சீன அதிபர் ஷீ ஜின்பிங் சவுதி சென்றபோதே இதற்கான விதை போடப்பட்டதாக தெரிகிறது. ஆனால், அவரது பயணம், வருங்காலத்தில் இந்தியாவுக்கு இப்படியொரு சிக் கலை ஏற்படுத்தும் என்பதை அத்தனை எளிதாக ஊகித்திருக்க முடியாது என்பது தான் உண்மை. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கத்தாரில் செப்., 1ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலும் சவுதி - பாகிஸ்தான் இடையிலான உறவு நெருக்கமடைந்ததற்கு காரணமாகி இருக்கிறது. எனினும், கடந்த சில ஆண்டுகளாகவே இரு நாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக தீவிரமாக பேச்சு நடத்தி இருக்க வேண்டும். அதன் பின்னணியில் சீனாவின் பங்கும் இருந்திருக்கலாம். இது குறித்த உண்மை நிச்சயம் ஒருநாள் வெளியே வரும். தற்போதைய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க இந்தியா, 'ஆப்பரேஷன் சிந்துார்' போன்ற நடவடிக்கையை எடுத்தால், சவுதி தன் மீதான தாக்குதலாக அதை கருதக்கூடும். நம் நாட்டின் மீது பதில் தாக்குதல் நடத்தாவிட்டாலும், குறைந்தபட்சம் சர்வதேச அளவில் அரசியல் காய்களை நகர்த்தும். பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், சவுதிக்கு, பாகிஸ்தான் அணு ஆயுத பாதுகாப்பு வழங்கும் என தெரிகிறது. இதற்காக சவுதியில் பாகிஸ்தான் ஒரு ஏவுதளத்தையோ அல்லது ராணுவ தளத்தையோ நிர்மாணிக்கலாம். ஏன், அணு ஆராய்ச்சி நிறுவனத்தை கூட சவுதியில், பாகிஸ்தான் அமைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்காக, அமெரிக்கா ராணுவ தளம் அமைத்துக் கொள்வதற்கு, சவுதி கடந்த காலங்களில் அனுமதி அளித்திருந்தது. அதை வைத்து பார்க்கும்போது, பாகிஸ்தானுக்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. தவிர, கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்ததும், சவுதி அரசை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது. தாக்குதலுக்கு முன்பாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டிரம்பிடம் கலந்து ஆலோசித்ததாக வெளியான தகவலும் சவுதி - அமெரிக்க உறவில் லேசான விரிசலை ஏற்படுத்தி இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளமும் இஸ்ரேல் தாக்குதலை கண்டு கொள்ளவில்லை என்பதும் கூட வளைகுடா நாடுகளை அமெரிக்காவுடனான தங்கள் எதிர்கால உறவு குறித்து யோசிக்க வைத்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவு

கடந்த நுாற்றாண்டில், அணு-ஆயுத தயாரிப்பில் தீவிரமாக இறங்கிய பாகிஸ்தான், இதற்காக வளைகுடா நாடுகளின் ஆதரவையும் பெற முயற்சித்தது. 'இஸ்லாமிக் பாம்' என்ற பெயரில், வளைகுடா நாடுகளை ஓரணியில் திரட்டும் அந்த லட்சியத்தை பாகிஸ்தான் தற்போது அடைந்திருப்பதாகவே தோன்றுகிறது. நம் நாடு சுதந்திரம் அடைந்தது முதல், தற்போது வரை வளைகுடா நாடுகளுடன் நட்பு பாராட்டியே வந்திருக்கிறது. ஏன் காஷ்மீர் பிரச்னையில் கூட வளைகுடா நாடுகள், பாகிஸ்தானை கண்மூடித்தனமாக ஆதரித்தது கிடையாது. ஆனால், இனி வரும் காலங்களில் அந்த நிலை மாறிப் போகலாம். பாகிஸ்தான் மீது நாம் எடுக்கும் ஒவ்வொரு ராணுவ நடவடிக்கைகளுக்கும், வளைகுடா நாடுகள் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பும் தெரிவிக்கலாம். இஸ்ரேல் விவகாரத்தில் பாதுகாப்பு மற்றும் அறிவியல் துறைகளில் நாம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். மறுபுறம் பாலஸ்தீன விவகாரத்தில் அரேபிய நாடுகளின் நிலைப்பாட்டை இதுவரை நாம் ஆதரித்ததே இல்லை. இதனால், இந்தியாவுடனான சவுதியின் உறவு நெருடலாகவே நீடிக்கிறது. இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? சவுதி - பாகிஸ்தான் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை தொடர்ந்து, சீனாவுக்கான கச்சா எண்ணெய் சப்ளை, பிரச்னைக்குரிய மலாக்கா ஜலசந்திக்கு பதிலாக, இனி சீனா - பாகிஸ்தானின் பொருளாதார பாதை வழியாக எடுத்துச் செல்வதற்கான சூழல் உருவாகி இருக்கிறது. இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்க சீனா தயக்கம் காட்டி வருவதால், ஆசிய அபிவிருத்தி வங்கியை பாகிஸ்தான் அணுகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனவே, இதன் பின்னணியில் இருக்கும் சர்வதேச அரசியலையும் நாம் கூர்ந்து கவனித்தாக வேண்டும். குறிப்பாக சவுதியில் இருந்து இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பு ஏற்படுமா? வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. என்.சத்தியமூர்த்தி சர்வதேச அரசியல் ஆய்வாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

murali daran
செப் 22, 2025 10:05

சவூதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் தனது ராணுவத்தை பௌன்சராக நிறுத்தி தனது நாட்டு அன்றாட தேவையை நிறைவேற்றிக்கொள்ளும்.


Gopalan
செப் 22, 2025 00:04

பணக்காரர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நிரந்தர அரசியல் கட்சி சார்பு இல்லை. சந்தர்ப்பத்திற்கு தக்கபடி மாறுவார்கள். பணக்கார நாடுகளும் அப்படித் தான். அவர்கள் உள்நாட்டு பிரச்சினைகளைத் தவிர, பிற நாடுகளுடைய பிரச்சினைகளுக்கு அவசியமில்லாமல் தங்கள் அமைதி, சுகத்தை கெடுத்துக் கொள்ள மாட்டார்கள்.


ManiMurugan Murugan
செப் 21, 2025 23:22

ManiMurugan Murugan சவுதி பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் என்கிற பெயரில் சிக்கியுள்ளது என்றேசொல்வேன்


amicos
செப் 21, 2025 22:24

ஒரு பாமும் ஒன்றும் வெடிக்காது,சீனா,துருக்கி,முன்னர் உ ஸ் எ கொடுத்த எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தி சிந்தூர் போரில் ஒன்றும் நடக்கவில்லை.சவூதி பாக் ஆயுதங்களைத்தான் வாங்குகிறது.இஸ்ரலை பயமுறுத்த அணு ஆயத்தம் வைத்திருக்கும் பாக் உடன் ஒப்பந்தம் போட்டுள்ளது


beindian
செப் 21, 2025 18:28

பார்த்தசாரதிக்கும் கோபம் வரும்ல...


Sun
செப் 21, 2025 18:25

பாகிஸ்தானை அடியாளாக பயன்படுத்தப் பார்க்கிறது சவுதி அவ்வளவுதான். தவிர தேவை இல்லாம முஸ்லிம் நாடு என்பதற்காக எந்த ஒரு நாட்டின் விசயத்திலும் சவுதி மூக்கை நுழைப்பதில்லை. இந்தியாவுக்கும் சவுதிக்கும் பொருளாதார ரீதியாக கொடுக்கல் வாங்கல் நிறையவேஉண்டு அதன் பொருளாதாரத்தைத்தான் சவுதி பார்க்கும். அமெரிக்கா மீதான நம்பகத்தன்மை டிரம்ப் வந்தவுடன் எல்லா நாடுகளுக்குமே குறைந்துள்ளது ,இதற்கு சவுதியும் விதி விலக்கு அல்ல. இதில் இன்னொரு நன்மையும் உண்டு ஈரான் போன்ற நாடுகள் பாகிஸ்தான் உடனான நட்பை குறைத்துக் கொள்ளும். இந்த ஒப்பந்தம் பற்றி பாகிஸ்தான்தான் பெரிதாக பேசுகிறதே தவிர சவுதி பெரிதாக வாய் திறக்கவே இல்லை.


பேசும் தமிழன்
செப் 21, 2025 16:06

இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட நினைத்து இருப்பது ஒரு வகையில் நல்லதுக்கு தான்..... இஸ்லாமியர் அல்லாத பிற நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வழி வகுக்கும்..... ஒரு மதம் எந்தளவுக்கு வேகமாக வளர்கிறதோ..... அதை விட வேகமாக அழியும்.... அதற்க்கான அறிகுறி தென்பட ஆரம்பித்து விட்டது......எல்லாம் உலக நன்மைக்காக தான் !!!


VENKATESAN
செப் 21, 2025 10:46

ஐயா, இது 2010 இல்லை 2025. இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தருவதற்கு எந்த நாடும் நினைச்சு கூட பார்க்க முடியாது.


நிக்கோல்தாம்சன்
செப் 21, 2025 09:48

சீனாவிற்கு தன்நாட்டு பெண்களை ஏற்றுமதி செய்கிறது பாகிஸ்தான் அதாவது கூட்டி கொடுக்கிறது. சவுதிக்கு பிச்சைக்காரர்கள், அமெரிக்காவிற்க்கோ தனது நாட்டின் பாகங்களையே தானமாக வழங்கி விட்டது. இந்த நிலையில் இப்போ பாம். பட்டைய கிளப்புங்க தமிழக பாகிஸ்தானிய சப்போர்ட்டர்களே, உங்களின் தாய்நாடான பாகிஸ்தானின் வழியில் நீங்களும் அதையே செய்வீர்களா ?


Kalyanaraman
செப் 21, 2025 09:32

சௌதிக்கு பிச்சைக்காரன்களை ஏற்றுமதி பாகிஸ்தானுக்காக இந்தியாவை ஒருபோதும் எதிர்க்காது. மேலும் சவூதியின் பெரும் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.


முக்கிய வீடியோ